ஜெ.வுக்காக அவசரமாக சென்ற ஆம்புலன்ஸை திருப்பிவிட்ட போலீசார்
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ததால் தண்டையார்பேட்டை வழியாக வந்த ஆம்புலன்ஸ் வேறு வழியாக திருப்பி விடப்பட்டது.
ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் வீதி, வீதியாக சென்று மக்களிடம் ஆதரவு கோரினார்.

அவர் வருகையையொட்டி அப்பகுதி பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டு மாணவ, மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆர்.கே. நகர் தொகுதி நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்நிலையில் மாலை 4 மணிக்கு தண்டையார்பேட்டை வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. அவசரமாக செல்ல வேண்டும் தயவு செய்து வழிவிடுங்கள் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் போலீசாரிடம் கூறியுள்ளார். அதற்கு போலீசாரோ நாங்கள் சொல்லும் பக்கமாக நீ போய்யா என்று தெரிவித்து வாகனத்தை வேறு வழியாக திருப்பிவிட்டுள்ளனர்.
ஆர்.கே. நகர் தொகுதியில் ஏற்கனவே அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழு ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்யாமல் ஓய்வது இல்லை என்று பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications