கேரளாவில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உடல் கிருஷ்ணகிரியில் அடக்கம்?- போலீஸ் குவிப்பு
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் படுக்கா வனப்பகுதியில், அதிரடிப்படை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், மாவோயிஸ்ட் இயக்க தலைவன் குப்புராஜ் என்ற மூர்த்தி, 60, உள்பட மூன்று பேர் பலியாகினர். மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்து வந்த மூர்த்தி, கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த, ராணுவ வீரர் துரைசாமியின் மகன் என்பது தெரியவந்தது. மூர்த்தியின் உறவினர்கள் அவரது சடலத்தை வாங்கி வந்து, கிருஷ்ணகிரியில் அடக்கம் செய்யப்போவதாக தகவல் பரவவே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications