For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 நாள் போலீஸ் காவலில் பக்ருதீன்... போலீஸார் தீவிர விசாரணை

Google Oneindia Tamil News

Police gets in 6 day custody
வேலூர்: சென்னையில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனை 6 நாள் காவலில் அனுமதித்து வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பக்ருதீனை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல முக்கிய வழக்குகளில் குற்றவாளியான பக்ருதீனை சென்னையில் போலீஸார் கடுமையாகப் போராடி பிடித்துக் கைது செய்தனர். பக்ருதீன் மீது பல முக்கிய வழக்குகள் உள்ளதால் அவன் பிடிபட்டது காவல்துறைக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட பக்ருதீன நேற்று வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் காவல்துறை சார்பில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தாக்கல் செய்த மனுவில், பரமக்குடியில் முருகன், வேலூரில் மாநில பா.ஜ.க. மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, மதுரையில் சுரேஷ், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ், வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் ஆகிய 5 பேரின் கொலை வழக்கு சம்பந்தமாக போலீஸ் பக்ருதீனிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 13 தினங்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதுகுறித்து பக்ருதீன் மாஜிஸ்திரேட்டிம் கூறுகையில்,நான் போலீஸ் காவலில் செல்லத் தயார். ஆனால் நாட்களைக் குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான். இதையடுத்து 6 நாள் காவலை அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பக்ருதீனை அழைத்துச் சென்ற போலீஸார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Vellore court granted 6 day custody for 'Police' Fakruddin for interrogation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X