முதல்வர் குறித்து அவதூறு.. திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு!
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கோவை மாவட்டம் பேரூரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, திமுக எம்எல்ஏ கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஆர்எஸ் பாரதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பேரூர் போலீசார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, திமுக எம்.எல்.ஏ கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உட்பட 7 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications