தமிழகம் முழுவதும் 112 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 112 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1996-ம் ஆண்டு நேரடியாக பணியில் சேர்ந்த துணை ஆய்வாளர்கள் 112 பேர் 2005-ம் ஆண்டு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்களுக்கும் 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெறாமல் இருந்தவர்களுக்கும் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Police inspectors through out the state, the promotion to DSP

இந்த பதவி உயர்வில் 2004-ம் ஆண்டு வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டு பதவி உயர்வு பெற்ற 44 இன்ஸ்பெக்டர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றி அவர்கள் கூறுகையில், எங்களுக்கு பின்னரே பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்களுக்கு முன்கூட்டி அடுத்த பதவி உயர்வு வழங்குவது சரிதானா? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த 1996-ல் பணியில் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம். அதன் காரணமாகவே அவர்களுக்கு வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தன

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+