புதுச்சேரியில் விவசாயிகள் போராட்டம் ... போலீஸ் தடியடி... எம்எல்ஏ சட்டை கிழிப்பு - வீடியோ
புதுச்சேரியில், கூட்டுறவு சர்க்கரை ஆலையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ. மற்றும் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் எம்எல்ஏவின் சட்டை கிழிந்தது.
புதுச்சேரி: புதுச்சேரியில் விவசாயிகளுடன் ஆர்பாட்டத்தில் பங்கேற்க எம்எல்ஏ செல்வம் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் எம்எல்ஏவின் சட்டை கிழிக்கப்பட்டது.
கரும்பு விவசாயிகளுக்கு ஓராண்டாக வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ஏழரை கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள சர்க்கரை ஆலை முன்பாக என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ செல்வம் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
போலீசாரின் எதிர்ப்பையும் மீறி போராட்டக் குழுவினர் உள்ளே செல்ல முயன்றன்றதால், அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். காவல்துறை நடத்திய தடியடியில், எம்எல்ஏ செல்வத்தின் சட்டை கிழிக்கப்பட்டது.
இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்னாள் தலைவர் ஞானசேகரன் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ செல்வம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.