மகேந்திரகிரி மர்ம விமான விவகாரம்... தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது போலீஸ்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ திரவ இயக்க திட்ட வளாகத்தின் மீது மர்ம விமானம் பறந்தது தொடர்பாக நெல்லை சரக டிஐஜி, மாவட்ட எஸ்பி மேற்பார்வையில் போலீசார் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது மகேந்திரகிரி இஸ்ரோ திரவ இயக்க திட்ட ஊத்தும வாளகத்தின் மேலே கடந்த இரண்டு நாட்களாக கிளைடர் விமானம் இரவு நேரத்தில் தாழ்வாக பறந்து வட்டமடித்து சென்றது. இதை பார்த்த பொதுமக்கள் பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Police launch hunt on suspicious plane in Mahendragiri

கிளைடர் விமானம் பறந்தது குறித்து விசாரணை நடத்த வனப்பகுதிக்கு போலீசார் சென்றபோது மலையின் உள்ளே 7 கிமீ தொலைவில் கஞ்சிபாறை என்ற இடத்தில் செல்போன்களுக்கு சிக்னல் கிடைக்காத இடத்தில் கம்பியில்லாத வைபை இன்டர்நெட் சேவை சிக்னல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரோ மையத்திற்கு தீவிரவாதிகளால ஆபத்து ஏற்படுமா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று தினங்களாக இது வதந்திதான் என வனத்துறையினரும், போலீசாரும் கூறி வந்த நிலையில் நேற்று இரவு டிஐஜி அன்பு, எஸ்பி விக்ரமன் தலைமையிலான போலீசார் அங்கு முகாமிட்டு தீவிர சோதனை நடத்தினர்.

மதுரை இன்ஸ்பெக்டர் பிரதாப்சிங் தலைமையில் மலையேற்ற பயிற்சியில் அனுபவம் உள்ள போலீசார் 100 பேரும், கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அலுவலர் விஷ்மு விஸ்வநாதன் தலைமையில் அனுபவம் உள்ள வனத்துறையினர் 30 பேரூம் வனத்தின் உள்பகுதியில் ஆட்கள் போக முடியாத பகுதியிலும் ஊடுருவி தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகி்ன்றனர்.

இதுகுறித்து எஸ்பி விக்ரமன் கூறுகையில் இதுவரை கிளைடர் விமானம் பறந்தது உறுதி செய்யப்படவில்லை இது உறுதிப்படுத்துவதற்கு வனத்தின் உள்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+