தூத்துக்குடி: சுபாஷ் பண்ணையார் கூட்டாளிகள் மீது குண்டு வீச்சு எதிரொலி- போலீசார் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் நந்தவனபட்டியில் 2011 ஜனவரி 10ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜாராகி விட்டு சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் 12 பேர் 2 கார்களில் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது கொடை ரோடு அருகே கமலாபுரம் பிரிவில் டிப்பர் லாரி, கார், டூவீலரில் பயங்கர ஆயுதங்களுடனும், நாட்டு வெடிகுண்டுகளுடனும் 25 பேர் கொண்ட கும்பல் அவர்களின் கார்களை வழிமறித்து சராமரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.
வெடிகுண்டு கார் மீது படாமல் சாலையில் விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் 12 பேரும் காயமின்றி தப்பினர்.
இது தொடர்பாக நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ், விஜயபாண்டி, தச்சநல்லூரை சேர்ந்த எஸ்டேட் மணி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 19க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்டத்தில் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில தனிப்படையினர் தூத்துக்குடி நகர் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
தூத்துக்குடி தருவைகுளம் ரோட்டில் உள்ள சுனாமி காலனி, ஸ்ரீவைகுண்டம் சேரகுலம், எப்போதும் வென்றான், பொட்டல்காடு, ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளூர் போலீசாரின் உதவியோடு அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பிடிபட்டவர்கள் பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டுகள் ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் தயாரிக்கப்பட்டவை என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications