கணவர் இறந்ததாக கருதி 'ஓ'..வென அழுத 3 மனைவிகள்.. ஆனால் உயிரோடு வந்ததால் அப்படியே 'ஷாக்'...!
சென்னை: கணவர் இறந்து விட்டதாக வந்த தவறான தகவலை நம்பி கோயம்பேடு காவல் நிலையத்தில் 3 பெண்கள் கதறி அழுது கொண்டிருந்த போது இன்ப அதிர்ச்சியாக அவர்களது கணவர் வந்து நிலைமையை விளக்கினார். இந்த வினோத சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவர் திடீரென நெஞ்சுவலியால் துடிக்கவே, ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், இறந்தவரின் விவரம் எதுவும் தெரியாமல் குழம்பி நின்றுள்ளனர். அப்போது தான் சம்பவ இடத்தில் கிடந்ததாக கையில் செல்போனோடு வந்திருக்கிறார் ஆட்டோ டிரைவர் ஒருவர்.
அங்கிருந்து தான் குழப்பம் ஆரம்பமாகியிருக்கிறது....
சம்பவ இடத்தில் கிடந்த செல்போன் என்பதால் அது மரணமடைந்தவரின் செல்போனாகத் தான் இருக்க வேண்டும் என முடிவு செய்த போலீசார், அந்த செல்போனில் பதிவாகியிருந்த கடைசி மூன்று எண்களைத் தொடர்பு கொண்டு செய்தி தெரிவித்துள்ளனர்.
அந்த 3 எண்களிலும் போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது 3 பெண்கள் போனை எடுத்து பேசினார்கள். அந்த செல்போனின் சொந்தகாரரின் பெயர் ஜெமினி, முன்னாள் ராணுவ வீரரான அவர் திருவண்ணாமலை மாவட்டம் சீலனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
போலீசார் தொடர்பு கொண்ட 3 பெண்களுமே செல்போன் சொந்தக்காரரின் 3 மனைவிகளாம். இதனால், தங்களது கணவர் தான் மரடைப்பால் இறந்து விட்டதாகக் கருதி, கதறி அழுத படி கோயம்பேடு காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர் மூவரும்.
அப்போது எதிர்பாரா விதமாக காணாமல் போன தனது செல்போனைக் கண்டு பிடித்துத் தரும்படி புகார் அளிக்க அதே காவல் நிலையத்திற்கு வந்துள்ளார் ஜெமினி. அதுவரை போட்டி போட்டு அழுது கொண்டிருந்த 3 மனைவிகளுக்கும் கணவர் எதிரே உயிரோடு நின்றது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
முதலில் குழம்பிப் போன போலீசார் பின்னர் நடந்த தவறை புரிந்து கொண்டனர். ஜெமினி உயிரோடு வந்த சந்தோஷத்தில் இருந்த 3 மனைவிகளோடு, செல்போனையும் பெற்றுக் கொண்டு போலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார் ஜெமினி.
தற்போது, போலீசாருக்கு அடுத்த குழப்பம் ஆரம்பமானது. பஸ் நிலையத்தில் மாரடைப்பில் இறந்தவர் ஜெமினி இல்லை என்பது உறுதியானபடியால், இறந்தவர் யார்? என்று கண்டுபிடிக்கும் வேலையை தொடங்கிவிட்டனர் போலீசார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications