Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பனந்தாள் ஆதீன மடத்துக்குள் அத்துமீறி நுழைந்த மூவர்.. இருவர் ஓட்டம்.. ஒருவர் சிக்கினார்!

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஆதீன மடத்திற்குள் இன்று 3 பேர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களில் ஒருவரை மடத்தில் இருந்தவர்கள் பிடித்தனர். மற்ற இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

ஆதீன மடத்திற்குள் இன்று மூன்று பேர் ஊடுறுவினர். அவர்களைப் பார்த்த ஆதீன ஊழியர்களும் அங்கிருந்தவர்களும் யார் நீங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் அந்த மூன்று பேரும் பதிலளிக்கவில்லை. மாறாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இதையடுத்து அவர்களைப் பிடிக்க அங்கிருந்தவர்கள் முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கனார். மற்ற இருவரும் ஓடி விட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். தப்பி ஓடியவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 3 பேரும் மடத்திற்குள் ஊடுறுவியது ஏன் என்பதை அறிய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+