தொடர் போராட்டங்களால் அச்சம்: காஞ்சி மடத்தை விட்டு வெளியே வராமல் முடங்கிய சங்கராச்சாரியார்கள்!
தொடர் போராட்டங்களால் காஞ்சி மடத்துக்குள்ளேயே சங்கராச்சாரியார்கள் முடங்கி உள்ளனர்.
காஞ்சிபுரம்: தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் உக்கிரமான போராட்டங்கள் தொடருகின்றன. இதனால் காஞ்சி சங்கராச்சாரியார்களை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரித்து 3 நாட்களாக சங்கர மடத்திலேயே பாதுகாத்து வருகிறது போலீஸ்.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்கவில்லை இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர். இது தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் சங்கர மடங்களை முற்றுகையிட்டும் விஜயேந்திரர் உருவபடம், கொடும்பாவிகளை எரித்தும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. விஜயேந்திரருக்கு எதிராக பல இடங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திராவிடர் கழகமும் சங்கர மடங்களை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. தொடர்ச்சியான இந்த போராட்டங்களைத் தொடர்ந்து சங்கரச்சாரிகளான ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரையும் மடத்தை விட்டு வெளியே வரவே கூடாது என போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் தங்களிடம் அனுமதி பெறாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் ஏராளமான போலீசார் சங்கர மடத்தின் முன்பாகவும் 3-வது நாளாக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சங்கரச்சாரிகள் இருவரும் சங்கர மடத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.,












Click it and Unblock the Notifications