கருணாநிதிக்கு ரத்த அழுத்த பிரச்சினை.. தொண்டர்கள் கண்ணீர்.. பாதுகாப்பு வளையத்தில் காவேரி மருத்துவமனை
கருணாநிதிக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் கண்ணீர் வடித்தபடி உள்ளனர்.
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு டிரக்யாஸ்டமி கருவி நீக்கப்பட்டு பின்னர் புதிய கருவி பொருத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு கடந்த 24-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து வதந்தி பரவியது. கருணாநிதிக்கு ஒன்றுமில்லை, அவர் நலமாக இருக்கிறார் என்று ஸ்டாலின் பேட்டி அளித்தார். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கோபாலபுரத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர்.
இதையடுத்து ஒவ்வொரு தலைவர்களாக கோபாலபுரத்துக்கு வருகை தந்தபடி இருந்தனர். இந்நிலையில் நேற்று காய்ச்சலும் நோய்தொற்றும் குறைந்துவிட்டது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் நள்ளிரவில் ரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 20 நிமிடங்களிலேயே அவரது ரத்த அழுத்தம் சீரானது என்று மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவரை காண தொண்டர்கள் மருத்துவமனைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இன்றும் மருத்துவமனைக்கு தலைவர்கள் வருவர் என்பதால் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications