வேன் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாதது ஏன்? டிரைவரின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைத்த "அடடே" போலீஸ்
வேனை ஓட்டிய போது ஹெல்மெட் அணியாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய போலீஸார் அந்த வேன் ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய பழனி போலீஸார் பரிந்துரைத்துள்ளனர்.
பழனி: பழனியில் வேனை ஓட்டும் போது ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்தத்துடன் அவரது உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (35). வாடகை வேன் டிரைவர். இவர் கடந்த 17-ஆம் தேதி ஒட்டன்சத்திரத்தில் இருந்து கேரளாவுக்கு வேனில் காய்கறிகள் ஏற்றி சென்றார்.
வழியில் சத்திரப்பட்டி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேனையும் நிறுத்தினர்.

ஆவணங்கள் சரிபார்ப்பு
அப்போது வேனின் பர்மிட், காப்பீடு, வேன் ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்டவற்றை போலீஸார் சரிபார்த்தனர். எல்லாம் சரியாக இருந்த போதிலும் போலீஸார் அபராதம் விதித்து ரசீது கொடுத்தனர்.

ஹெல்மெட் அணியவில்லை
ரசீதில் ராஜ்குமார் வேனை ஓட்டியபோது ஹெல்மெட் அணியாததால் அவரிடம் ரூ.100 வசூலித்ததாக போலீஸார் ரசீது அளித்தனர். இந்த ரசீதின் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் மோட்டார் வாகன அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாருக்கு ஒரு நோட்டீஸ் வந்துள்ளது.

உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது
அந்த நோட்டீஸில், ‘வேனின் பதிவு எண்ணை குறிப்பிட்டு, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தை ஹெல்மெட் அணியாமல் இயக்கியதால் ஏன் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். தவறினால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகைத்த ராஜ்குமார்
இந்த நோட்டீஸால் ராஜ்குமார் திகைத்து போனார். வேன் ஓட்டும் போது ஹெல்மெட் அணியாததற்கு போலீஸார் அபராதம் விதித்தனர். அதையும் பார்க்காமல் மோட்டார் வாகன ஆய்வாளர் உரிமத்தை ரத்து செய்யவுள்ளது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது ராஜ்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் பைக்கில் சீட் பெல்ட் அணியவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications