சென்னையில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்... பூட்டிய வீட்டில் இருந்து 4 பெண்களின் அழுகிய உடல்கள் மீட்பு
சென்னை: சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் பெண்கள் 4 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் சீனிராஜ். சென்னை ராயப்பேட்டையில் உள்ள முத்து தெருவில் கடந்த 4 ஆண்டுகளாக, அவரது மனைவி சந்தனமீனா, மகள்கள் பவித்ரா, பரிமளா மற்றும் சினேகாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வீட்டின் வெளிக்கதவு பூட்டிய நிலையிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் வீடு பூட்டப்பட்டு இருப்பதற்கான காரணத்தை சீனிராஜிடம் கேட்டுள்ளார். அப்போது பதற்றம் அடைந்த சீனிராஜ் முன்னுக்கு பின்னாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ராயப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, அங்கு அழுகிய நிலையில், சீனிராஜின் மனைவி மற்றும் மகள்கள் என 4 பேர் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து சடலங்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான சந்தனமீனாவின் கணவர் சீனிராஜை தேடி வருகின்றனர். மர்மமான முறையில் 4 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications