போராட்டம் நடத்துவோர் மீது துப்பாக்கி சூடு நடத்தலாம்: அதிமுகவினர் மீது பொன்.ராதா அட்டாக்
நாமக்கல்: அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள், அலுவலகங்கள் எதிரே தடையை மீறி போராட்டம் நடத்துவோர் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தினாலும் தப்பில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திரமோடியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சமீபத்தில் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திப்பு நடத்தினர். இதை தரக்குறைவாக விமர்சனம் செய்தார் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் இளங்கோவன்.

இதையடுத்து அதிமுகவினர் இளங்கோவன் உருவ பொம்மைகளை எரித்து போராட்டங்கள் நடத்தினர். பாஜகவினரும் போராட்டங்கள் நடத்தினர். அதிமுக தொண்டர்கள் சிலரால், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தாக்குதல் நடத்தப்பட்டது. திருச்சியில் நேற்று கட்சி அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜர் சிலை மீதும் தக்காளி போன்ற பொருட்கள் பட்டுவிட்டன.
அதிமுகவினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது போன்ற தோற்றம் தமிழகத்தில் உள்ளது.
இதுகுறித்து திருச்சங்கோட்டில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "அரசியல் கட்சி தலைவர்களின் வீடு, கட்சி அலுவலகம் போன்றவற்றின் எதிரே, போராட்டம் நடத்த யாருக்கும் போலீசார் அனுமதி தரக்கூடாது. அவ்வாறு தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டால், அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினாலும் தவறு கிடையாது.
தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலையை தவிர்க்க, இதுபோன்ற போராட்டங்களுக்கு இனியும் தமிழக அரசு அனுமதி தரக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கூடங்குளம், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் அனைவருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில குழுவினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற திட்டங்களை தடுத்து, தமிழக வளர்ச்சிக்கு அவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். பொது சேவை வரி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்". இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மீதான தாக்குதலை தடுக்கும் வகையில், நடுநிலையோடு பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளது நல்ல அரசியல் நாகரீகமாக பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications