ரூ.2,438 கோடி ஆருத்ரா மோசடி.. பாஜகவில் பதவி பெற லஞ்சம் கொடுத்த ஹரீஷ்? நிர்வாகிகளுக்கு போலீஸ் சம்மன்
சென்னை: பொதுமக்களிடம் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்து சிக்கிய ஆரூத்ரா நிறுவன இயக்குநர் ஹரீஷ், பாஜகவில் பதவி பெறுவதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வழங்கியதாக கூறி விசாரணைக்கு ஆஜராகுமாறு அக்கட்சி நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.

தமிழ்நாடு பாஜக விளையாட்டுப் பிரிவு செயலாளராக இருந்தவர் ஹரீஷ். இவர், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் பொதுமக்களிடம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாக கூறி விளம்பரம் செய்தது.
தமிழ்நாடு பாஜக விளையாட்டுப் பிரிவு செயலாளராக இருந்த இதன் நிறுவனர் ஹரீஷ் கொடுத்த வாக்குறுதியை நம்பி, ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்து இருக்கின்றனர். இப்படி ரூ.2,438 கோடி பணத்தை பொதுமக்களிடம் ஆருத்ரா நிறுவனம் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்களிடம் பெற்ற பணத்தை ஆருத்ரா நிறுவனம் சொன்ன நேரத்தில் திருப்பி தரவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

போலீஸ் நடவடிக்கை: இதனை தொடர்ந்து ஆருத்ரா இயக்குநர்கள் 14 பேர் மீது ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து அந்த நிறுவனங்கிள் அதிரடி சோதனை நடைபெற்றது. ஏற்கனவே இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்த ஹரீஷை கைது செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ஹரீஷ் கைது: இந்த நிலையில் கடந்த மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஹரீஷை அதிரடியாக கைது செய்தனர். அவரோடு மாலதி என்ற ஆருத்ரா நிறுவன நிர்வாகியும் கைதானார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பாஜக முன்னாள் நிர்வாகி நடிகை காயத்ரி ரகுராம், "பொதுமக்களின் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா கோல்ட் மோசடியில் பாஜக அமர் பிரசாத் ரெட்டியின் வலது கரம் பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் ஹரீஷ் கைது. அண்ணாமலை முன்னாள் காவலராக இருந்து தமிழக மக்களை ஏமாற்றிய திருடனுக்கு உதவி செய்துள்ளார்.

பாஜக நிர்வாகிகளுக்கு லஞ்சம்: குறிப்பாக பெண்களின் பணம் மற்றும் தங்கம். பதவி கொடுத்து அவருக்கு பாதுகாப்பு கொடுத்தவரையும் கைது செய்ய வேண்டும். அண்ணாமலையின் சாதனை போலிமலை." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், பாஜக விளையாட்டு பிரிவில் முக்கிய பொறுப்பை பெறுவதற்காக ஹரீஷ் நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்து உள்ளது. ஹரீஷுக்கு ரூ.130 கோடி பணம் தரப்பட்டு உள்ளதாக கூறியுள்ள போலீசார், இது தொடர்பாக பாஜக பிரமுகர் அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி சுதாகர் ஆகியோரை நேரில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.
-
எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே! கஷ்டப்பட்டு சிரிக்கிறார்! அண்ணாமலை உருக்கம்! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
இந்து மக்கள் கட்சி பேரணிக்கு அனுமதி இல்லை.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்!












Click it and Unblock the Notifications