தூத்துக்குடி அண்ணாநகர் மசூதியில் போலீசாருக்கு நோன்பு கஞ்சி.. தோட்டாக்களை லோட் செய்து வெய்ட்டிங்!
தூத்துக்குடி அண்ணாநகரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் போலீசாருக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
Recommended Video
தூத்துக்குடி: அண்ணாநகரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் போலீசாருக்கு நோம்பு கஞ்சி வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றம் நிலவி வருகிறது. நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதனால் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் அணிவகுப்பு
தூத்துக்குடி பிரையன்ட் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அண்ணாநகர் 7வது தெருவில் காலையில் மோதல் வெடித்தது.
பெட்ரோல்குண்டு வீச்சு
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் என்ற இளைஞர் பலியானார். இந்நிலையில் 6வது தெருவில் திரண்ட சிலர் ரோந்து சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
பெட்ரோல்குண்டு வீச்சு
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் என்ற இளைஞர் பலியானார். இந்நிலையில் 6வது தெருவில் திரண்ட சிலர் ரோந்து சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து பதற்றம்
கற்கள் மற்றும் பாட்டில்களாலும் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி அண்ணா நகரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
நோன்பு கஞ்சி
இந்நிலையில் மொகிதீன் ஆண்டவர் பிச்சை மசூதியில் போலீசாருக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. நோம்பு கஞ்சியை குடித்த போலீசார் துப்பாக்கிகளில் தோட்டாவை லோட் செய்து தெம்பாக உள்ளனர்.