'சிதம்பரம்'.. டாக்டர் ராமதாஸ்.. திருமாவளவன்: டென்ஷனில் போலீஸ்!
சிதம்பரம்: சிதம்ரம் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரே நாளில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் சுற்றுப்பயணம் செய்வதால் பரபரப்பு காணப்படுகிறது. போலீஸாரும் சற்றே டென்ஷனாக உள்ளனர்.
குறிப்பாக அரியலூர், பெரம்பலூர் மா்வட்டங்களில் பதட்டம் காணப்படுகிறதாம். சிதம்பரம் தொகுதியானது, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளையும் உள்ளடக்கி வருகிறது. இந்தத் தொகுதியில் பாமக போட்டியிடவுள்ளது. அந்த வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று இரவு சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட லெப்பைக்குடிகாடு பகுதியில் இன்று இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் திருமாவளவன் பங்கேற்கிறார். அதேசமயம், அரியலூரில் ராமதாஸ் பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
சமீப காலமாக பாமகவினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மோதல் போக்கில் இருந்து வருகிறார்கள். அதிலும் தர்மபுரி விவகாரத்துகுப் பின்னர் இரு தரப்பினரும் உஷ்ணத்துடன் மோதி வருகின்றனர்.
இதனால் டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் அருகருகே உள்ள ஊர்களுக்கு வருவதால் பதட்டம் காணப்படுகிறது. போலீஸாரும் டென்ஷனாக உள்ளனர்.
எந்தவிதப் பிரச்சினையும், மோதலும் வெடித்து விடாத வகையில் போலீஸார் பலத்த பாதுகாப்புக்கும், கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications