சென்னை போயஸ் கார்டனில் ஜெ. பங்களா அருகே தொடரும் போலீஸ் குவிப்பு- உரிமை கோரி தீபா வருகிறார்?
போயஸ் கார்டனில் ஜெயலலிதா பங்களா அருகே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா அருகே இன்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா நினைவு இல்லமாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். இதையடுத்து ஜெயலலிதா பங்களா அருகே நேற்று முதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா பங்களா உள்ள பகுதிக்கு வெளியாட்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் செல்ல போலீஸ் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனிடையே ஜெயலலிதாவின் பங்களாவை நினைவு இல்லமாக்கக் கூடாது என கூறி வரும் அவரது அண்ணன் மகள் தீபா இன்று போயஸ் கார்டனுக்கு வரலாம் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்தே இன்றும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications