பூத் சிலிப் கொடுக்க கூட்டம் போட்டவர்கள் அகற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாக்குச்சாவடிகள் அருகில் கும்பலாக அமர்ந்து பூத் சிலிப் வினியோகம் செய்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
பூத் சிலிப் கொடுக்கும் இடத்தில் 2பேருக்கும் மேல் இருக்க கூடாது என்பது விதிமுறை. அதை மீறி சென்னையில், பெரியார்நகர், கொளத்தூர் பகுதியில் பத்து, பதினைந்துபேர் ஒன்றாக அமர்ந்து பூத் சிலிப் கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று கும்பலாக இருந்தவர்களை கலைந்துபோக கூறினர். ஆனால் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுகட்டாக அங்கிருந்து காவல்துறையினர் அகற்றினர்.
மேலும், கட்சி சின்னம் பொறித்த பூத் சிலிப்புகளையும் பறிமுதல் செய்தனர். கட்சிபாகுபாடின்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications