நெடுவாசல், கதிராமங்கலம், நாகை போராட்டக்காரர்களுக்கு தூத்துக்குடி படுகொலை அபாய மணி அடிக்கிறதா?
தூத்துக்குடி படுகொலைகள் நெடுவாசல், கதிராமங்கலத்துக்கு அபாய மணி அடிக்கிறதா?
Recommended Video

தஞ்சை: உலகையே உலுக்கிய ஜல்லிக்கட்டுப் புரட்சி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை பணிய வைத்தது.. ஆனால் ஜல்லிக்கட்டு புரட்சி அடுத்த பாய்ச்சலாக அரபு வசந்தங்களைப் போல விஸ்வரூபமெடுக்கலாம் என்பதால் சட்டத்தை வளைத்துப் போட்டு அந்த புரட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது அரசு.
அன்று முதல் சென்னை மெரினாவை இழுத்துப் பூட்டி வைத்திருக்கிறது அரசு. மெரினாவில் 4 பேர் கருப்பு சட்டையுடன் ஒன்று கூடினாலே வெலவெலத்துப் போகிறது போலீஸ். இன்னமும் மெரினாவின் வாசல்கள் புரட்சியாளர்களுக்கு திறக்கவில்லை.
ஜல்லிக்கட்டு ஒடுக்குமுறைகளுக்குப் பின் தமிழகத்தில் தன்னெழுச்சி கிளர்ச்சியும் வராது புரட்சியும் பூக்காது என கொக்கரித்தன அரசுகள். அலங்காநல்லூரும் மெரினாவும்தான் போர்க்களங்களா?

தொடரும் கிளர்ச்சிகள்
இல்லையே.. நெடுவாசல்களும் கதிராமங்களும் புதிய புரட்சி களங்களாக உருவெடுத்தன.. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஓஎன்ஜிசிக்கு எதிராக கிளர்ச்சிகள் நாளும் நடந்தேறின..

தமிழகம் முழுவதும் போராட்டம்
இத்துடன் இணைந்து கொண்டது தூத்துக்குடி. ஸ்டெர்லைட் கிளர்ச்சி. தமிழகத்தின் திசையெங்கும் கிளர்ச்சிகள்.. அதுவும் மத்திய அரசுக்கு எதிராக, மத்திய அரசின் பங்காளிகளான பல்லாயிரம் கோடி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக தமிழகம் தனலாய் தகித்தது.

பச்சை படுகொலை அரசு
இப்போது ஜல்லிக்கட்டுவில் காட்டப்பட்ட அரசு முகத்தின் அடுத்த கட்டத்தை அரங்கேற்றியுள்ளது. இந்திய நிலப்பரப்பில் எந்த மண்ணிலும் நிகழாத வகையில் வாழ்வுரிமைக்கு நியாயம் கேட்ட மக்களை ஈவிரக்கமே இல்லாமல் கேட்பார் எவருமே இல்லை என நினைத்து சட்டத்தை கீழே போட்டு மிதித்து காக்கை குருவிகளைப் போல சுட்டுப் படுகொலை செய்திருக்கிறார்கள்.

அந்த கொடூரர்கள் யார்?
தமிழகத்தில் இனி போராடினால் படுகொலை என்கிற அடுத்த அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது படுகொலை செய்தது போலீசாரா? துணை ராணுவத்தினரா? மப்டியில் இலக்கு வைத்து கொன்ற கொடூரரர்கள் யார் என தெரியவில்லை?

அடுத்து எல்லை பாதுகாப்பு படையினரா?
அண்மையில்தான் டெல்டா மாவட்டங்களில் திடீரென பல்லாயிரக்கணக்கான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இப்போது தூத்துக்குடி மண்ணில் படுகொலைகள் நடந்தேறியிருக்கிறது. இது நெடுவாசலுக்கும் கதிராமங்கலத்துக்குமான எச்சரிக்கையா? தமிழகம் இன்னொரு காஷ்மீராக உருவெடுக்க வைக்கப்படுகிறதா? என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.. அனேகமாக ஒடிஷாவின் சத்தீஸ்கரின் தண்டேவடா, தண்டகாருண்யா காடுகளில் மாவோயிஸ்டுகளை ஒடுக்க முகாமிட்டிருக்கும் எல்லை பாதுகாப்புப் படையினர் தமிழகத்தில் கால்பதிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications