தினகரன் ஆதரவாளருடன் ஓபிஎஸ் அணியின் தென்மாவட்ட பிரமுகர் திடீர் சந்திப்பால் பரபரப்பு
தினகரனின் தீவிர ஆதரவாளரை ஓபிஎஸ் அணியின் தென்மாவட்ட பிரமுகர் ஒருவர் திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னையில் வலம் வரும் தினகரனின் தீவிர ஆதரவாளரை ஓபிஎஸ் அணியின் தென்மாவட்ட பிரமுகர் ஒருவர் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அந்த தென்மாவட்ட பிரமுகர் தனித்து விடப்பட்டார்... அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் கோபத்தை சம்பாதித்திருந்தார்.
தர்மயுத்தத்தால் மறுவாழ்வு
அவரது சொந்த மாவட்டத்தில் சீண்டுவார் யாருமில்லாத நிலையில்தான் இருந்து வந்தார். ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தியதால் 'மறுவாழ்வு' பெற்று லைம் லைட்டுக்கு வந்தார்.
காத்திருந்தும் பயனில்லை
இரு அணிகளும் இணைந்த நிலையில் சொந்த மாவட்டத்தில் பார்களை மீண்டும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார் அந்த பிரமுகர். கட்சியில் பதவி கிடைக்காவிட்டாலும் இந்த பார்கள் கிடைக்கட்டுமே என காத்திருக்கிறார்.
தினகரன் தீவிர ஆதரவாளருடன் சந்திப்பு
அதற்கும் வழியே இல்லாத நிலை வந்துவிட்டதாம். இதனால் ரொம்பவே அதிருப்தியில் இருக்கும் அந்த பிரமுகர் திடீரென சென்னைக்கு வந்து தினகரன் கோஷ்டி நபரை பார்த்திருக்கிறார்.
ஆட்சியை கலைத்துவிடுங்கள்
அப்போது ரொம்பவே புலம்பித் தள்ளியிருக்கிறார். இந்த ஆட்சியை கலைக்கிற வேலையையாவது தினகரனை செய்ய சொல்லுங்களேன் என நொந்து போய் கூறினாராம்.