For Daily Alerts
Just In
18 எம்எல்ஏக்கள் வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.. திருமாவளவன் காட்டம்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
18 எம்எல்ஏக்கள் வழக்கு, ஸ்டெர்லைட் பற்றி திருமாவளவன் பேட்டி
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சென்னை ஹைகோர்ட் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரும் எம்எல்ஏக்களாக நீடிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நீதிமன்ற நடவடிக்கையில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது என தெரிவித்தார்.
11 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்ற திருமாவளவன் , 18 எம்எல்ஏக்கள் வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறியுள்ளார்.
Comments
English summary
VCK leader Thirumavalavan says political intervention in court proceedings is high. He also said The 11 MLAs disqualification judgement is shocking and said that lets see what will happen in the 18 MLAs case.