தமிழ்நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத்தான் போராட்டமே- திருமாவளவன் பதிலடி
தமிழ்நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத்தான் போராட்டமே நடத்தப்படுகிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: தமிழ்நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத்தான் போராட்டமே நடத்தப்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினி. இதையடுத்து அவர் மாலை சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் பேசுகையில், ஸ்டெர்லைட் போராட்டத்துக்குள் சமூகவிரோதிகள் நுழைந்து விட்டனர். எல்லாவற்றுக்கும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் பேசியது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறியிருப்பதாவது: அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்ததால் வன்முறை நிகழ்ந்துள்ளது. ரஜினியின் கருத்தை தான், தமிழக பாஜக ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
போராடியவர்களை சமுக விரோதிகள் எனவும், தமிழகம் சுடுகாடாகும் எனவும் தெரிவித்த கருத்துக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
போராடிய மக்களை சமூக விரோதிகள் என ரஜினி கூறுவது அறியாமையின் உச்சம் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்தார். 100 நாட்களாக போராட்டம் நடத்திய போது மக்களை சந்திக்காத ரஜினி, தற்போது கருத்து கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
சமூக விரோதிகள் ஊடுருவலால் தான் பிரச்சனை என்ற ரஜினியின் கருத்து சரியானது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் ஆமோதித்தார். தமிழ்நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத்தான் போராட்டம் நடைபெறுகிறது என்று திருமாவளவனும், போராட்டங்கள் நடைபெறாமல் இருந்தாலும் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் தெரிவித்தனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications