நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் தான் மாணவர்களை குழப்புகின்றனராம்.. சொல்கிறார் தமிழிசை
நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள்தான் மாணவர்களை குழப்புகின்றனர் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தீபா..சொல்வது இப்படி..தமிழிசை சொல்வது அப்படி- வீடியோ
சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள்தான் மாணவர்களை குழப்புகின்றனர் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் தமிழகத்தில் இருந்து 40 சதவீதம் மாணவ மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள்தான் மாணவர்களை குழப்புகின்றனர். மேலும் நீட் விவகாரத்தில் அரசியலை புகுத்தி மாணவர்களின் நம்பிக்கையை குலைக்காதீர்கள்.












Click it and Unblock the Notifications