பேரம் பேசியதாக கூறி தேமுதிகவை கேவலப்படுத்துகிறார் வைகோ.... பொன். ராதாகிருஷ்ணன் காட்டம்
சென்னை: தேமுதிகவுடன் பாஜக பேரம் பேசியதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியிருப்பதை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். அத்துடன் பேரம் பேசுகிற கட்சியாக தேமுதிகவை கேவலப்படுத்தியும் இருக்கிறார் வைகோ எனவும் பொன். ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.
தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணி இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தேமுதிகவை வளைப்பதற்காக திமுகவும் பாஜகவும் பேரம் பேசின என குற்றம்சாட்டியிருந்தார்.

இதை திமுக மறுத்துள்ளதுடன் வைகோவுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியுள்ளது. இந்த வக்கீல் நோட்டீஸை சட்டப்படி சந்திப்பேன் என வைகோவும் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தேமுதிகவுடன் எந்த ஒரு பேரத்தையும் பாஜக பேசவில்லை. அப்படி பேரம் பேச வேண்டிய தேவையும் பாஜகவுக்கு இல்லை என்றார்.
மேலும் தம்முடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை பேரம் பேசுகிற கட்சியாக வைகோ பார்க்கிறார் எனில் அவர்களை எப்படி மதிப்பீடு செய்துள்ளார் என்பதை அந்த கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். வைகோ தேமுதிகவை கேவலப்படுத்தியிருக்கிறார் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications