வாக்கு இயந்திரத்தில் பழுது... திருச்சி மினிக்கியூரில் வாக்குப்பதிவு 3 மணி நேரம் நீட்டிப்பு
திருச்சி: வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக திருச்சி மினிக்கியூரில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு வாக்குப்பதிவு நேரத்தை 3 மணி நேரம் நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஆனால், பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, வாக்குப்பதிவு நடைபெறுவது பாதிக்கப்பட்டது.

அந்தவகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை மினிக்கியூரில் 205வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. 78 வாக்குகள் பதிவான நிலையில் 88 என வாக்குப்பதிவு இயந்திரம் காட்டியதால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு வாக்குப்பதிவை 3 மணி நேரம் நீட்டிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, இரவு 9 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications