வாக்கு இயந்திரத்தில் பழுது... திருச்சி மினிக்கியூரில் வாக்குப்பதிவு 3 மணி நேரம் நீட்டிப்பு
திருச்சி: வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக திருச்சி மினிக்கியூரில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு வாக்குப்பதிவு நேரத்தை 3 மணி நேரம் நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஆனால், பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, வாக்குப்பதிவு நடைபெறுவது பாதிக்கப்பட்டது.

அந்தவகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை மினிக்கியூரில் 205வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. 78 வாக்குகள் பதிவான நிலையில் 88 என வாக்குப்பதிவு இயந்திரம் காட்டியதால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு வாக்குப்பதிவை 3 மணி நேரம் நீட்டிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, இரவு 9 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
இமெயில் ஐடி தராவிட்டால்... வேட்பாளருக்கு பெரிய சிக்கல்.. தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications