ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு போன் போட்டு தகவல் சொன்ன ஜவடேக்கர்
சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதியளித்த பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருக்கும், மத்திய இணை அமைச்சரும், ஜல்லிக்கட்டு நடத்த தொடர் முயற்சி எடுத்தவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவிட்டதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், தொலைபேசி மூலம், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தகவல் சொல்லியிருந்தார்.

இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் தளம் மூலம், சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
Union Minister @PrakashJavdekar called me now to give the good news that arrangements to conduct #Jallikattu in TN has been made. (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) January 8, 2016 தமிழர்களின் கலாச்சார விளையாட்டிற்கு அனுமதி வழங்கி பெருமை சேர்த்த பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் ஆகியோருக்கும், குரல் கொடுத்த அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது நன்றி. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Union Minister @PrakashJavdekar called me now to give the good news that arrangements to conduct #Jallikattu in TN has been made. (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) January 8, 2016 











Click it and Unblock the Notifications