சிறைச்சாலைகளை மாமனார் வீடாக மாற்றிய பெருமை தமிழகத்தையே சாரும்- பொன்னார் பொளேர்
சென்னை: சிறைச்சாலைகளை மாமனார் வீடாக மாற்றிய பெருமை தமிழகத்தையே சாரும் என பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்தார்.
பாகிஸ்தானை சேர்ந்த நபர் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் 18 டிவிகளும் 2 எப் எம் ரேடியோக்களும் கைப்பற்றப்பட்டன. சிறை விதிகளை மீறி இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்த படி பாகிஸ்தான் கைதி சுற்றித் திரியும் புகைப்படங்களும் சொகுசு வசதிகளுடன் நட்சத்திர ஓட்டல் உணவுகள் அவரது அறையில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் சிறையில் சொகுசு வசதி சம்பவத்தில் தொடர்புடையோரை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
சிறைகளை மாமனார் வீடாக மாற்றிய பெருமை தமிழகத்தையே சேரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications