மோடி ஸ்டைலில் மண்டியிட்டு வணங்கிய பொன் ராதாகிருஷ்ணன்.. கைதட்டி வரவேற்ற பாஜகவினர்!
நாகர்கோவில் கன்னியாகுமரி தொகுதியில் வென்றதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.யும், மாநில பாஜக தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன், மேடையில் மண்டியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதைப் பார்த்து பாஜகவினர் கைதட்டி வரவேற்றனர்.
கன்னியாகுமரி தொகுதியில் பிரமாண்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் முகாமிட்டு ஒன்றியம், நகரம் வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நாகர்கோவில், ஈத்தாமொழி, மைலாடி, தெரிசனங்கோப்பு, பத்மநாபபுரம், அழகியமண்டபம், வெள்ளிச்சந்தை, குலசேகரம் என நன்றி அறிவிப்பு கூட்டங்கள் நடந்த அனைத்து மேடைகளிலும் மண்டியிட்டு வணங்கி கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கட்சியினரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுபற்றி அவர் கூறுகையில், என்னுடைய வெற்றிக்காக பாடுபட்டால் உங்கள் முன் மண்டியிட்டு நன்றி தெரிவிப்பேன் என தேர்தல் பிரசாரத்தின்போது கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். அதை தற்போது நிறைவேற்றி வருகிறேன் என்றார்.
ஆனால் சமீபத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது மோடி இப்படித்தான் மண்டியிட்டு வணங்கினார். அதையே பொன் ராதாகிருஷ்ணனும் காப்பி அடித்துள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள்.
எப்படியோ.... நன்றி கூறி வணக்கம் வைப்பது ஆரோக்கியமானதுதானே...!












Click it and Unblock the Notifications