பெண்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. எஸ்.வி சேகருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எஸ்.வி சேகர் கருத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எஸ்.வி சேகர் கருத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறுவதாக திருமலை என்பவர் பதிவிட்ட கருத்தை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதோடு பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசி இருந்தார்.

இதுகுறித்த கேள்விக்கு தற்போது பாஜக கட்சியை சேர்ந்த எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். அதில் ''பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளை சகித்துக் கொண்டு இருக்க மாட்டோம்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனேவே இவரின் கருத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதையடுத்து எஸ்.வி சேகர் தன்னுடைய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார்.
மேலும் தமிழக ஆளுநர் குறித்தும் பேசினார். அதில் ''ஆளுநரை குற்றவாளியாக்க தமிழகத்தில் சதி நடக்கிறது. ஆளுநர் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தேவையில்லாமல் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications