”குஷ்பு குஷ்புதான் - காமராஜர் ஆக முடியாது” – பாஜக மத்திய அமைச்சர் பொன்.ரா "நச்"!
திருச்செந்தூர்: காங்கிரஸில் சேர்ந்தாலும், அரசியலில் இருந்தாலும் எந்த காலத்திலும் குஷ்பு குஷ்பு தான், அவர் ஒருபோதும் காமராஜர் ஆக முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். அந்த வாழ்த்து தொடரும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அது தொடரும் அளவுக்கு அவர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திறமையான அரசியல் தலைவர் என்று நான் நம்புகிறேன். ஆனால் காங்கிரஸ்க்கு குஷ்பு வந்த பிறகுதான் அந்த கட்சி தலைவர்களும், காங்கிரஸ் கட்சிக்காரர்களும் திரும்பி பார்க்கிறார்கள்.
இதுவரை காங்கிரஸ் கட்சியை எவரும் திரும்பி பார்க்காத நிலையில், இன்று அந்த கட்சிக்காரர்கள் திரும்பி பார்க்கிறார்கள் என்று சொன்னால் காங்கிரஸ் கட்சியின் தரத்தை நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.
எந்த காலத்திலும் சகோதரி குஷ்பு காந்தியாகவோ, காமராஜராகவோ மாற முடியாது. குஷ்பு குஷ்பு தான்" என்று தெரிவித்துள்ளார்.