அன்னை பராசக்தி அருளால் பல்லாண்டு வாழ்க: ஜெயலலிதாவுக்கு பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து

இது குறித்து அவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
அன்னை பராசக்தியின் அருளால் 66-ம் வயதில், அடி எடுத்து வைக்கும் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன். தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களிலும், பன்னெடு காலம் தாங்கள் இன்றை விட சிறப்பாக வாழ அருள் கூட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பொன், ராதாகிருஷ்ணன் தவிர அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஆ.மணியரசன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி, அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் இளவரசி பாலசுந்தரம், அம்பேத்கார் மக்கள் கட்சி நிறுவன தலைவர் ம.மத்தியாஸ் என்ற சீனிவாசன் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications