அகவை 68ஐ அடைந்துள்ள ‘அம்மா’வுக்கு பிறந்தநாள் வாழ்த்து: பொன்.ராதா வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளா.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை அதிமுகத் தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அகவை 68-ஐ அடைந்துள்ள தமிழக முதல்வர் ‘அம்மா'வுக்கு, எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அன்னை பராசக்தியின் அருளால் தாங்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.
பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் காலத்திற்கு பின்னால் அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வை உருக்குலையாமல் உயர்த்தி எடுத்து அவரது காலத்தில் இருந்ததை விட அதிக வலுவுள்ளதாக மாற்றி தமிழகத்தின் முதல்-அமைச்சராக 3 முறை பொறுப்பு வகித்து சிறப்பு பெற்ற தாங்கள், வாழ்வில் மேலும் சிறப்பு பல பெற அன்னை பராசக்தி தங்களுக்கு அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications