பொங்கல் வருது.. பானை தயாரிப்பு படு ஜரூர்.. கரூரில்!
கரூர்: கரூரைச் சுற்றியுள்ள பகுதியில் பொங்கல் பண்டிக்கைக்காக மண்பானை தயாரிக்கும் பணிகள் விறுவிருப்படைந்துள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை, முதல் நாள் சூரியன் பொங்கலாகவும் இரண்டாம் நாள் மாட்டு பொங்கலாகவும், மூன்றாம் நாள் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. வுடகிழக்கு பருமழையை அடிப்படையாக வைத்து பயிரிடப்படும் நெல் உள்ளிட்ட தானியங்கள், தை மாத அறுவடை செய்யப்படுவதால் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பானை செய்யும் குயவர்கள், தற்போது தீவிரமாக பானைகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலத்தில் சிலர் பாரம்பரியமாக மண் பானை தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டுதான் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என பாரம்பரியமாக பின்பற்றி வருகிறோம்.
கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளைம், நெய்யல், வெள்ளியனை, லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் மண்பானை தயாரிப்பு பணிகள் நடக்கிறது.
30 முதல் 300ரூபாய் வரை, பானை விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டு பருவமழை ஓரளவு பெய்ததால் பரவலாக நெல் சாகுபடி அதிகளவில் நடந்துள்ளது. அதனால் பொங்கலுக்கான பானை தயாரிக்கும் பணி ஜரூராக நடக்கிறது.
இது குறித்து மண்பானை தொழிலாளர்கள் கூறியதாவது:- பொங்கல் பானை வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் சில குடும்பங்களில் பாரம்பரிய முறையில் தான் தயாரிக்கப்பட்ட உணவு தான் சிறந்தது என்று மருத்துவர்களும் கூறி வருகின்றனர். நாகரிக மோகத்தால் சிலர் குக்கர், சில்வர் பானைகளில் பொங்கல் வைக்கின்றனர். அவை சரியானது அல்ல.
இந்தாண்டு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால் கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு நெல் சாகுபடி பரப்பு அதிகமாகி உள்ளது. அதனால் வியாபாரிகளிடம் இருந்து பொங்கல் பானைக்கான ஆர்டர் வரத் துவங்கியுள்ளது என்றார்கள் மகிழ்ச்சியாக.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications