விமரிசையாக நடந்த தென்காசி அய்யாபுரம் தேவி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 32வது பூக்குழி திருவிழா!
தென்காசி: தென்காசி மாவட்டம், அய்யாபுரம், அருள்மிகு தேவி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் 32வது ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த அக்டோபர் 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவிற்கு முன்னதாக 10 நாட்கள் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இத்திருவிழாவில் பெருந்திரளான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 6வது தலைமுறையாக நடத்தி வரும் இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று தேவி ஸ்ரீ மாரியம்மனுக்கு மூன்று நாள் சிகர நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

முதல் சிகர நிகழ்வான அக்டோபர் 6 ஆம் தேதி மாலையில் தீச்சட்டி மற்றும் தீச்சட்டி காவடி ஊர்வலம் நடந்தது, அதனை தொடர்ந்து தேவி ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து தமிழ் பாரம்பரிய கரகாட்டம் அரங்கேறியது.
சிகர நிகழ்வான இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை காலை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரியை இறை பக்தியுடன் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து பக்த நன்கொடையாளர்களின் உதவியுடன் மதிய அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
மாலை 4:30 மணியளவில் அருள்மிகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து குற்றால தீர்த்தம் தொடங்கப் பெற்று சுமார் 6 மணி நேரம் ஊர் முழுவதும் வலம் வந்து இரவு 10:30 மணியளவில் அன்னை தேவி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலுக்கு வந்து அடைந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று, நள்ளிரவு 21 அடி நீளம் கொண்ட பூக்குழி அமைத்து அக்கினி வளர்க்கப்பட்டது.
மூன்றாவது நாளான அக்டோபர் 8 ஆம் தேதி, அதிகாலை 6 மணியளவில் நாதஸ்வர நையாண்டி மேளம் முழங்க, நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, மக்கள் வெள்ளத்தில் 32வது ஆண்டு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பூக்குழியினை காண வரும் பக்தர்களுக்கு வசதிக்காகவும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக கோவில் நுழைவாயிலில் அகண்ட LED திரை நிறுவப் பட்டிருந்தது.

பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்துதல், முளைப்பாரி கரைத்தல் அதனை தொடர்ந்து மஞ்சள் பால் விளையாட்டு நடைபெற்று தொடர்ந்து அம்மனுக்கு மகா சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு முன்னதாக அன்னை ஸ்ரீமாரியம்மனும், மகன் ஸ்ரீ பைரவரும் பக்த மெய் அன்பர்களுக்கு கணி வழங்கி அருள் புரிவர். விழாவைக் காண அய்யாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவினை சிறப்பிக்கும் வகையில் கொக்கிரகுளம் மணிசங்கரம்மாள் வில்லிசை நிகழ்ச்சியும், குத்துக்கல்வலசை திருமலைக்குமார் நையாண்டி மேளமும் அரங்கேறியது.
இந்த மூன்று நாள் திருவிழா ஏற்பாடுகளை காவல்துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு அய்யாபுரம் ஊர் நாட்டாண்மைகளும் பொதுமக்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வரும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தீயணைப்பு துறை மற்றும் மருத்துவ முதல் உதவி குழு ஏற்பாடுகள் கூடுதல் சிறப்பு. மேலும் சிறப்பாக 5 நாள் கொடையாக அன்னை தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு சித்திரை மாதத்திலும், மகன் ஸ்ரீ வைரவர்க்கு தை மாதத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: கார்த்திகேயன்
புகைப்படம்: சரவணன், விக்ரமன்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications