சட்டசபை தேர்தல்... தமிழகத்தில் தபால் ஒட்டுப்பதிவு துவங்கியது... அரசு அதிகாரிகள் ஆர்வம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தபால் மூலம் ஓட்டுப்பதிவு இன்று துவங்கியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் இன்று முதல் மே 14 வரை தங்களின் ஓட்டுக்களை தபால் மூலம் பதிவு செய்யலாம்.
வரும் 16ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பணி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள், முன்கூட்டியே வாக்களிக்கும் வகையில் தபால் ஓட்டுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதனைப் பயன்படுத்தி தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களாக பணியாற்ற உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

தபால் ஓட்டு...
இவர்கள் தேர்தலன்று தங்கள் தொகுதிகளுக்கு சென்று ஓட்டுபோட வாய்ப்பு இருக்காது என்பதால், இந்த தபால் மூலம் ஓட்டுப்போடும் திட்டம் உள்ளது.

விண்ணப்பங்கள்...
முன்னதாக தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பங்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது. இதேபோல், தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகங்களிலும் வினியோகிக்கப்பட்டது.

குளறுபடிகள்...
கடந்த முறை நடந்த தேர்தல்களில், இவ்விண்ணப்பங்கள் பெறுவதிலேயே குளறுபடிகள் நிகழ்ந்தன. விண்ணப்பங்கள் பற்றாக்குறையாக இருந்ததால், அலுவலர்களுக்கு அவற்றை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. பலரும், இத்தகைய அலைகழிப்புகளை காரணமாகக்கூறி தபால் ஓட்டு போடாமலேயே தவிர்த்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆந்லைனில்...
எனவே, இம்முறை இச்சிக்கலை தவிர்க்க, அவர்கள் பணியாற்றும் அலுவலகங்கள் அல்லது நிர்வாகங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்-லைனில் அனுப்பப்பட்டுள்ளது. தேவையான எண்ணிக்கையில், பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.

மே 14ம் தேதி வரை...
அதன் தொடர்ச்சியாக இன்று முதல் தமிழக சட்டசபை தேர்தலில் தபால் மூலம் ஓட்டுப்பதிவு இன்று துவங்கியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் இன்று முதல் மே 14 வரை தங்களின் ஓட்டுக்களை தபால் மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19ம் தேதி வரை...
இந்த தபால் ஓட்டுக்கள் வாக்கு எண்ணிக்கை நாளான மே 19ம் தேதி காலை வரை பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் தபால் ஓட்டுகள் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications