சட்டசபை தேர்தல்... தமிழகத்தில் தபால் ஒட்டுப்பதிவு துவங்கியது... அரசு அதிகாரிகள் ஆர்வம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தபால் மூலம் ஓட்டுப்பதிவு இன்று துவங்கியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் இன்று முதல் மே 14 வரை தங்களின் ஓட்டுக்களை தபால் மூலம் பதிவு செய்யலாம்.
வரும் 16ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பணி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள், முன்கூட்டியே வாக்களிக்கும் வகையில் தபால் ஓட்டுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதனைப் பயன்படுத்தி தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களாக பணியாற்ற உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

தபால் ஓட்டு...
இவர்கள் தேர்தலன்று தங்கள் தொகுதிகளுக்கு சென்று ஓட்டுபோட வாய்ப்பு இருக்காது என்பதால், இந்த தபால் மூலம் ஓட்டுப்போடும் திட்டம் உள்ளது.

விண்ணப்பங்கள்...
முன்னதாக தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பங்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது. இதேபோல், தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகங்களிலும் வினியோகிக்கப்பட்டது.

குளறுபடிகள்...
கடந்த முறை நடந்த தேர்தல்களில், இவ்விண்ணப்பங்கள் பெறுவதிலேயே குளறுபடிகள் நிகழ்ந்தன. விண்ணப்பங்கள் பற்றாக்குறையாக இருந்ததால், அலுவலர்களுக்கு அவற்றை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. பலரும், இத்தகைய அலைகழிப்புகளை காரணமாகக்கூறி தபால் ஓட்டு போடாமலேயே தவிர்த்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆந்லைனில்...
எனவே, இம்முறை இச்சிக்கலை தவிர்க்க, அவர்கள் பணியாற்றும் அலுவலகங்கள் அல்லது நிர்வாகங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்-லைனில் அனுப்பப்பட்டுள்ளது. தேவையான எண்ணிக்கையில், பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.

மே 14ம் தேதி வரை...
அதன் தொடர்ச்சியாக இன்று முதல் தமிழக சட்டசபை தேர்தலில் தபால் மூலம் ஓட்டுப்பதிவு இன்று துவங்கியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் இன்று முதல் மே 14 வரை தங்களின் ஓட்டுக்களை தபால் மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19ம் தேதி வரை...
இந்த தபால் ஓட்டுக்கள் வாக்கு எண்ணிக்கை நாளான மே 19ம் தேதி காலை வரை பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் தபால் ஓட்டுகள் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications