''டோன்ட் வொர்ரி''... திமுக தலைமையை கூர் பார்த்த அழகிரி போஸ்டர்கள்.. !
சென்னை: மு.க.அழகிரியைய கட்சியை விட்டு நீக்கியதில் அவரது ஆதரவாளர்கள் மதுரை முழுவதும் அவ்வப்போது ஒட்டி வந்த சர்ச்சை போஸ்டர்களுக்கும் முக்கிய இடம் உண்டு.
அதிலும் சமீப காலமாக அவர்கள் ஒட்டிய சில பரபரப்பு போஸ்டர்கள்தான் கட்சி் தலைமையை கொந்தளிக்க வைத்து விட்டது.
அவர்கள் போஸ்டர் அடிக்கப் போக, அது அழகிரிக்கே எதிராக திரும்பியது சோகம்தான்.

போஸ்டர் பாய்ஸ்...
மதுரையில் போஸ்டர்களுக்கு பிரபலமானவர்கள் அழகிரி ஆதரவாளர்கள். எந்த போஸ்டராக இருந்தாலும் அதில் இடம் பெறும் வாசகம் ரொம்பப் பிரபலம். எப்படித்தான் இப்படி யோசிப்பார்களோ என்று வியக்கும் அளவுக்கு உண்மையிலேயே சிலாகிக்க வைப்பார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

அண்ணன் வர்றார்லே...
அதேபோல இனிமேல் அழகிரி சென்னையிலிருந்து செயல்படப் போகிறார் என்று முன்பு பேச்சு அடிபட்டபோது, சென்னைக்கும் வந்து அண்ணன் வர்றார்லே என்று போஸ்டர் ஒட்டி கிலியேற்படுத்தினர் மதுரை அழகிரி ஆதரவாளர்கள் என்பது நினைவிருக்கலாம்.

ஆப்பு வைத்த போஸ்டர்கள்
ஆனால் எந்த போஸ்டர்கள் அழகிரிக்கு புதிய அந்தஸ்தைக் கொடுத்ததோ அதே போஸ்டர்கள்தான் இன்று அழகிரிக்கு ஆப்பு வைத்து விட்டன.

ஒரே நேரத்தில் எப்படி இரண்டு எஜமானர்களுடன்
அதில் ஒரு போஸ்டர்தான் - ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்கலாம், ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களிடம் வேலை பார்க்க முடியாது என்ற போஸ்டர்.

தென்னகத்து எஜமானே
அதில் ஒரு போஸ்டர்தான் - ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்கலாம், ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களிடம் வேலை பார்க்க முடியாது என்ற போஸ்டர்.

டோன்ட் வொர்ரி
சமீபத்தில் அழகிரி ஆதரவாளர்கள் ஐந்து பேரை கட்சி நீக்கியதைத் தொடர்ந்து மறுபடியும் ஒரு போஸ்டரை டவுன்ஹால் ரோடு பக்கம் போய் அடித்துக் கொண்டு வந்து ஒட்டினர். அதில் இடம் பெற்ற வாசகம்தான் செம குசும்புத்தனமானது.. டோன்ட் வொர்ரி.. இதுதான் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்த வாசகம். இதைப் பார்த்து சிலாகிக்காத, சிரிக்காத மதுரை மக்களே இல்லை.

சும்மா இருங்கலே...
இதனால் அழகிரியே கூட டென்ஷனாகி விட்டார். இனிமேல் போஸ்டர் அடிக்கும் வேலையெல்லாம் கூடாது என்று எச்சரித்தார் தனது ஆதரவாளர்களை. ஆனாலும் அவர்கள் நின்றபாடில்லை.

கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா...
மாணிக்கம் என்ற திமுக கவுன்சிலர், அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறி தைப் பொங்கலுக்கு போஸ்டர் ஒட்டினார். அதில், கோழி மிதித்து குஞ்சு சாகுமா? என்ற வாசகத்தை கொட்டை எழுத்துக்களில் கோழி, குஞ்சுகளோடு இருக்கும் படத்தைப் போட்டிருந்தார். அதில் அழகிரி படம் இல்லை. ஆனால் கருணாநிதி, அன்பழகன் உள்ளி்டடோரின் படங்களைப் போட்டு வைத்திருந்தார்.

மேலும் டென்ஷனான ஸ்டாலின்
இந்த போஸ்டர் மு.க.ஸ்டாலினை மேலும் டென்ஷனாக்கி விட்டதாக தெரிகிறது. இப்படி போஸ்டர்கள் மூலம் தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் டென்ஷன்படுத்தி வந்ததால்தான் அவர் அழகிரிக்கு எதிராக தீவிரமாக இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

நீக்கத்திற்கு என்ன போஸ்டர் போடப் போறாங்களே...
தற்போது அழகிரி நீக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கும் ஏதாவது போஸ்டர்கள் ஒட்டுவார்களா என்று தெரியவில்லை... ஒட்டினாலும் ஒட்டலாம்.. யார் கண்டார்கள்.












Click it and Unblock the Notifications