பொட்டு சுரேஷ் கொலை உள்ளிட்ட 3 வழக்குகளில் அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை: பொட்டு சுரேஷ் கொலை உட்பட 3 வழக்குகளில் அட்டாக் பாண்டிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கோரி அட்டாக் பாண்டி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கு, மாரிமுத்து என்பவரின் காரை எரித்த வழக்கு, துரை தயாநிதியின் நண்பர் ராம்கி கொலை முயற்சி வழக்குகளில் ஜாமீன் கோரி அட்டாக் பாண்டி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி தீப்தி அறிவுநிதி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிந்த நிலை யில் அட்டாக் பாண்டியின் 3 ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அட்டாக் பாண்டி மீது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலையத்தில் தேர்தல் மோதல் வழக்கு, மதுரை பெருங்குடி காவல் சரகத்தில் வீரணன் என்பவருக்கு குவாரியில் மண் அள்ளிய வழக்கு, மாவட்ட குற்றப் பிரிவில், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்ய மறுத்து, வீட்டை தனக்கு விற்கு மாறு மிரட்டிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி அட்டாக் பாண்டி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். ஜெயம் பைனான்ஸ் அதிபர் அசோக்கை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் முன்ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்றாததால் அட்டாக் பாண்டிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதை ரத்து செய்யக் கோரி தனியாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம் வாதிடும்போது, அட்டாக் பாண்டி மீது 20 வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் முன்ஜாமீன் நிபந்தனையை அவர் நிறைவேற்றவில்லை. இந்த மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். இதையடுத்து விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications