இந்த சாதனை மாணவிகளை வறுமையால் தடுத்து நிறுத்த முடியவில்லை
கோவை: பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிகள் தீபிகா, காயத்ரி ஆகியோர் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பூரை சேர்ந்தவர் தீபிகா. ஏழை குடும்பத்தை சேர்ந்த அவரால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தார். கட்டணம் செலுத்தாததால் பள்ளியில் தினந்தோறும் திட்டு, அவமானம். இதனால் 7ம் வகுப்பு படிக்கையில் படிப்பை நிறுத்தினார்.

இது குறித்து அறிந்த தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகள் தீபிகாவை படிக்க வைக்க முன்வந்தனர். திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்த தீபிகா பத்தாம் வகுப்பு தேர்வில் 81 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதே போன்று தேசிய குழந்தைகள் தொழிலாளர் திட்ட அதிகாரிகள் படிக்க வைத்த காயத்ரி என்ற மாணவியும் பத்தாம் வகுப்பு தேர்வில் 79 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
காயத்ரியின் தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டார். காயத்ரியின் தாய் மாதம் ரூ.2 ஆயிரத்திற்கு வேலை செய்து வந்தார். வறுமையால் 9 வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் காயத்ரிக்கு.
பிற குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஏக்கத்துடன் பார்த்த காயத்ரிக்கு ஆபத்பாண்டவனாய் வந்து அவரின் கையிலும் புத்தகப்பையை கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகள். காயத்ரி கருவம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.
வறுமையால் கல்வி என்பது எட்டாக்கனியாகிப்போன நேரத்தில் தீபிகாவுக்கும், காயத்ரிக்கும் உதவி கிடைத்ததை நினைத்து நினைத்து அவர்கள் மகிழ்கிறார்கள்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications