கரண்ட்டுக்கு தொடரும் சோதனை... தூத்துக்குடி 3வது யூனிட் பராமரிப்புக்காக நிறுத்தம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3வது யூனிட் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மின்சார நிலைமை மேலும் மோசமடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மீண்டும் மின்வெட்டுப் பிரச்சினை தலை தூக்கி நிற்க ஆரம்பித்துள்ளது. வழக்கம் போல எங்க ஊர்ல இத்தனை மணி நேரம் கரண்ட் கட், உங்க ஊர்ல என்று மக்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் இருக்கும் மின் நிலையங்களும் புட்டுக்க ஆரம்பித்துள்ளதால் மின் விநியோகம் மீண்டும் மோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியின் துயரக் கதை
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் முதல் மூன்று யூனிட்கள் மிகவும் பழமையானவை. இவை நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தை மீறி செயல்பட்டு வருகின்றன. இதனால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது.

5 தடவைக்கு மேல் பழுது
இந்த மாதத்தில் மட்டும் குறைந்தது 5 தடவைக்கும் மேல் பழுதானது. இதனால் இதனை சீரமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை சீரமைக்க ரூ.226 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக பழுதின் காரணமாக முன்னுரிமை அடிப்படையில் தற்காலிகமாக சீரமைக்க மின் வாரியம் இதற்கு ரூ.6 கோடி ஓதுக்கியுள்ளது.

தற்காலிகமாக சீரமைப்பு
இதனை அடுத்து 3வது யூனிட்டை பராமரித்து தற்காலிகமாக சீரமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பான பணி துவங்கியுள்ளது. தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது.

விரைவில் முடித்தால்தான் மீண்டும் உற்பத்தி
பணிகளை விரைவில் முடிந்து மீண்டும் மின்சார உற்பத்தியை துவங்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த பணிகள் முடிய 40 முதல் 45 நாட்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

45 நாள் கரண்ட் காலி
இதனால் இந்த யூனிட்டில் உற்பத்தியாகும் 210 மெகா வாட் மின்சாரம் 45 நாட்களுக்கு கிடைக்காது. தற்போது தமிழகத்தில் சில இடங்களில் குறைந்தது 3 மணி நேரம் மின்தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஊர்களில் பல மணி நேரம்
அதேசமயம், கோவை, திருப்பூர் போன்ற தொழில்நகரங்களில் பல மணி நேரத்திற்கு மின்சாரம் தடைப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications