கரண்ட்டுக்கு தொடரும் சோதனை... தூத்துக்குடி 3வது யூனிட் பராமரிப்புக்காக நிறுத்தம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3வது யூனிட் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மின்சார நிலைமை மேலும் மோசமடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மீண்டும் மின்வெட்டுப் பிரச்சினை தலை தூக்கி நிற்க ஆரம்பித்துள்ளது. வழக்கம் போல எங்க ஊர்ல இத்தனை மணி நேரம் கரண்ட் கட், உங்க ஊர்ல என்று மக்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் இருக்கும் மின் நிலையங்களும் புட்டுக்க ஆரம்பித்துள்ளதால் மின் விநியோகம் மீண்டும் மோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியின் துயரக் கதை
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் முதல் மூன்று யூனிட்கள் மிகவும் பழமையானவை. இவை நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தை மீறி செயல்பட்டு வருகின்றன. இதனால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது.

5 தடவைக்கு மேல் பழுது
இந்த மாதத்தில் மட்டும் குறைந்தது 5 தடவைக்கும் மேல் பழுதானது. இதனால் இதனை சீரமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை சீரமைக்க ரூ.226 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக பழுதின் காரணமாக முன்னுரிமை அடிப்படையில் தற்காலிகமாக சீரமைக்க மின் வாரியம் இதற்கு ரூ.6 கோடி ஓதுக்கியுள்ளது.

தற்காலிகமாக சீரமைப்பு
இதனை அடுத்து 3வது யூனிட்டை பராமரித்து தற்காலிகமாக சீரமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பான பணி துவங்கியுள்ளது. தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது.

விரைவில் முடித்தால்தான் மீண்டும் உற்பத்தி
பணிகளை விரைவில் முடிந்து மீண்டும் மின்சார உற்பத்தியை துவங்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த பணிகள் முடிய 40 முதல் 45 நாட்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

45 நாள் கரண்ட் காலி
இதனால் இந்த யூனிட்டில் உற்பத்தியாகும் 210 மெகா வாட் மின்சாரம் 45 நாட்களுக்கு கிடைக்காது. தற்போது தமிழகத்தில் சில இடங்களில் குறைந்தது 3 மணி நேரம் மின்தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஊர்களில் பல மணி நேரம்
அதேசமயம், கோவை, திருப்பூர் போன்ற தொழில்நகரங்களில் பல மணி நேரத்திற்கு மின்சாரம் தடைப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications