அதிமுகவை அழ வைக்கப் போகும் மின்வெட்டு: நல்லகண்ணு
திண்டுக்கல்: லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு மின்வெட்டு பிரச்சனை பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாண்டியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, 'நாட்டில், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு குடிநீர் பிரச்னை, ஏழைகளுக்கு வீடு இல்லாத பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி அதைப் பற்றி எல்லாம் கவலைக்கொள்ளாமல் பாபர் மசூதியை மீண்டும் கட்டுவோம் என்பது வேதனையளிக்கிறது.
பாரதிய ஜனதாவிற்கு ஆதரவளித்துள்ள தமிழக கட்சிகள் இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இந்த தேர்தலில் மின் வெட்டு பிரச்னை அ.தி.மு.க.விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.