Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின் திட்டங்கள் பற்றி அரசு எனக்கு தான் பதில் அளிக்கவில்லை, ராமதாஸுக்காவது பதில் கூறுமா?: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின் திட்டங்கள் குறித்து தமிழக அரசு என் கேள்விகளுக்கு பதில் அளிக்காவிட்டாலும் பாமக நிறுவனர் ராமதாஸின் கேள்விகளுக்காவது பதில் அளிக்குமா என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கேள்வி-பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி:- மின்சாரம் பற்றி டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கும் - செம்மொழி பற்றி தாங்கள் விடுத்த அறிக்கைக்கும் முதல்வர் பதில் கூறாமல், அமைச்சர்கள் பதில் சொல்லியிருக்கிறார்களே?.

Power issue: Will ADMK govt. address atleast Ramadoss's queries?- Karunanidhi

பதில்:- அதிலிருந்தே நான் கூறியதும், டாக்டர் ராமதாஸ் கூறியதும் உண்மை என்று புரியவில்லையா?. நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வரே பதில் சொல்லியிருப்பாரே?. உண்மை அவருக்கும் புரிந்தபடியால் தான், தான் பதில் அறிக்கை விடுக்க விரும்பாமல், 2 அமைச்சர்களைப் பிடித்துப் பதில் சொல்ல வைத்திருக்கிறார். எது உண்மை என்பதை மக்களே அறிவார்கள்.

மின்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், "திமுக ஆட்சியில் கிடப்பில் போட்டிருந்த அனல் மின் உற்பத்தித் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா முடுக்கி விட்டதன் காரணமாக 5 புதிய அனல் மின் உற்பத்தி அலகுகள் உற்பத்தியைத் தொடங்கி 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறன் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

இதிலிருந்தே, தற்போது கூடுதலாகக் கிடைக்கும் 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். திமுக ஆட்சியில் இந்தத் திட்டங்கள் தொடங்கப்படாவிட்டால் இந்த 2,500 மெகாவாட் மின் உற்பத்தி கிடைத்தே இருக்காது. அதற்காக திமுக ஆட்சிக்கு நன்றி கூற வேண்டியவர்கள், இந்த ஆட்சியினர். முதல்வர் அறிக்கையிலும், துறையின் அமைச்சர் அறிக்கையிலும் பிற மாநிலங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, அதுவும் 15 ஆண்டுகளுக்கு நீண்ட கால ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த அளவுக்கு மின்சாரம் வாங்கும்போது, டெண்டர் கோரப்பட்டதா? என்ன விலை?. அதுவும் ஒரே நேரத்தில் 15 ஆண்டுகளுக்கு நீண்ட கால ஒப்பந்தம் போடப்பட்டதன் மர்மம் என்ன?. 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டால், அதுவரை தமிழக அரசின் சார்பில் மின் உற்பத்தித் திட்டங்களே தொடங்க மாட்டார்களா?. இது பற்றிய விவரங்களை மீண்டும் மீண்டும் கேட்டு இந்த அரசினர் அதற்கு மட்டும் பதிலளிப்பதில்லையே; என்ன காரணம்?. இனியாவது பதிலளிப்பார்களா?. எனக்குப் பதிலளிக்க விரும்பாவிட்டாலும், பாமக நிறுவனர், அமைச்சரின் அறிக்கைக்குப் பதிலாக 10 கேள்விகளை விவரமாகக் கேட்டிருக்கிறார். அதற்காவது அரசினர் பதில் அளிப்பார்களா?.

கேள்வி:- எப்படியோ இந்த அதிமுக ஆட்சியில் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு புதிய தலைவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுவிட்டாரே?.

பதில்:- திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவராக நியமனம் பெற்ற கபிலன், கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்ற பிறகு, 2½ ஆண்டு காலமாக அந்தப் பதவியிலே யாரும் நியமிக்கப்படவில்லை. 2½ ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மின் தொடரமைப்பு கழக இயக்குனராக இருந்த அக்ஷய் குமாரை அரசு நியமித்துள்ளது. நியமிக்கப்பட்ட நிலையில் புதிய தலைவரின் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக செய்தி வந்திருக்கிறது.

ஒழுங்குமுறை ஆணையம் நீதிமன்ற அந்தஸ்தில் செயல்படுவதாலும், பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டுமென்பதாலும், நீதித்துறையை சேர்ந்தவர் தான் இந்த பதவியிலே நியமிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்திலே தொழில் துறையினர் முறையிட்டுள்ளார்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒழுங்கு முறை ஆணைய புதிய தலைவராக எஸ்.அக்ஷய் குமார் அமைச்சர் முன்னிலையில் பதவியேற்றிருக்கிறார். பதவியேற்ற மறுநாளே, அவருடைய நியமனத்திற்குத் தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+