மின்பற்றாக்குறை குறைந்து விட்டது... ஓ.பி.எஸ். தரும் "ஸ்வீட் ஷாக்"!
சென்னை: தமிழ்நாட்டில் மின் வழங்கும் திறன் 13 ஆயிரம் மெகாவாட் அளவை எட்டியுள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை குறைந்துள்ளதாகவும் சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-
விவசாயம் :
விவசாயத்துறைக்கு ஜெயலலிதா அரசு மிகுந்த முன்னுரிமையினை அளித்ததன் பயனாக 2010-11-ல் 75.95 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த உணவு உற்பத்தி, 2014-15-ல் 122.86 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. விவசாயத்துறையின் பொருளாதார வளர்ச்சி வீதமும் 2013-14, 2014-15-ம் ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. விவசாயத்துறைக்கு 2010-11-ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 2,072.43 கோடி ரூபாய்தான். ஆனால் இத்துறைக்கான 2015-16-ம் ஆண்டின் ஒதுக்கீடு 6,613.68 கோடி ரூபாய் ஆகும்.
ஜெயலலிதாவின் அரசு கடந்த 4 ஆண்டுகளாக விவசாய சாகுபடி பரப்பளவையும், உற்பத்தித் திறனையும், விவசாயிகளின் வருவாயினையும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு :
வேலைவாய்ப்பைப் பெருக்க, தொழில் துறையை ஜெயலலிதா அரசு சிறப்பாக ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தின் தென்பகுதிகளில் தொழில் முதலீடுகளை ஈர்க்க, சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் தொழில் மேம்பாட்டினை ஊக்குவித்திட, மதுரை-தூத்துக்குடி தொழில் மேம்பாட்டு வழித்தடத் திட்டத்தை, செயல்படுத்த ஜெயலலிதா அரசு, முனைப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்களின் மாநாட்டை, மே 23-24-ல் நடத்த ஜெயலலிதா அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பெரும் தொழில்களுக்கும், சிறு குறு தொழில்களுக்கும் திட்ட அனுமதிகளை எளிமைப்படுத்த, தனித்தனியே ஒற்றை சாளர இணையதளங்கள் 2015-16-ல் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2015-16-ம் ஆண்டில் இத்தகைய பயிற்சிகளை 2 லட்சம் நபர்களுக்கு அளிப்பதற்கு ஜெயலலிதா அரசு இலக்கிட்டுள்ளது. இதற்காக திறன் மேம்பாடு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் 100 கோடி ரூபாய் 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மின் பற்றாக்குறை :
ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றபோது மின்பற்றாக்குறை எவ்வாறு இருந்தது என்பதையும், அதன் பிறகு எவ்வாறு அது சரி செய்யப்பட்டு வருகிறது என்பதையும், அதனால் எந்த அளவிற்கு மின் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என்பதையும் விரிவாக இந்த நிதிநிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
குறைந்துள்ளது :
2011-ம் ஆண்டு ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற பொழுது மாநிலத்தின் மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட் ஆனால் மின் வழங்கல் திறன் 8 ஆயிரம் மெகாவாட்டாக மட்டுமே இருந்தது. மின் பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. தற்போது தமிழ்நாட்டின் மின் வழங்கும் திறன் 13 ஆயிரம் மெகாவாட் அளவை எட்டியுள்ளது. இதில் இருந்து எந்த அளவுக்கு மின் பற்றாக்குறை குறைந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications