கனமழையால் மின்சாரம் துண்டிப்பு.... 2-வது நாளாக விடிய விடிய இருளில் மூழ்கிய சென்னை
சென்னை: சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை நீடித்ததால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் சென்னையும் புறநகர் பகுதிகளும் 2 வது நாளாக விடிய விடிய இருளில் மூழ்கிக் கிடந்தன.
சென்னையில் நேற்று பகலிலேயே வானம் மேகமூட்டத்துடன் இருட்டாகக் காணப்பட்டது. இதனால் பகலே இரவாகிப் போனது.

ஆனால் தொடர் கனமழை பெய்ததால் மின்விநியோகம் முற்றாக சென்னை முழுவதும் முன்னெச்சரிக்கையாக துண்டிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் நிறுத்தப்பட்ட மின்சாரம் இன்று காலை வரையில் விநியோகிக்கப்படவில்லை. பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் பொது மக்கள் நலன் கருதி இன்று இரவும் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
#ChennaiRains State Emergency - 1070; District Emergency - 1077; Electricity - 1912; Fire & Rescue -101All Numbers- https://t.co/PNZoiIhjyB
— Gargi Rawat (@GargiRawat) December 2, 2015 இதனால் சென்னையின் பெரும்பகுதியும் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications