3400 மின் கம்பங்கள் சாய்ந்தன.. சென்னையில் விரைவில் மின்சார சப்ளை: அமைச்சர் தங்கமணி உறுதி
சென்னையில் மின்சார சப்ளை விரைவில் சீரடையும் என உறுதியளித்தார் மின்துறை அமைச்சர் தங்கமணி.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புயலால் சேதமடைந்த 3400 மின் கம்பங்களை சீர் செய்து விரைவில் சென்னையில் மின்சார சப்ளை வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று மாலையில் கூறுகையில், புயலின் வேகம் குறைந்ததும் மின் கம்பங்கள் சீரமைக்கப்படும். இதுவரை 3 ஆயிரத்தி 400 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக தகவல் கிடைத்தது. போர்க்கால அடிப்படையில் அவை சீர் செய்யப்பட்டு விரைவில் மின்சார சப்ளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 4 ஆயிரம் மின் ஊழியர்கள் சென்னையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால் அங்கு செல்ல வேண்டாம். இவ்வாறு தங்கமணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications