குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அடுத்த மாதம் சென்னை வருகை
சென்னை: பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில் (ஓ.டி.ஏ.) அடுத்த மாதம் 10-ந் தேதி இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில் (ஓ.டி.ஏ.) அடுத்த மாதம் 10-ந்தேதி இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா, அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார்.

அதற்கு முன்னதாக, 9-ந் தேதி இரவு நீலகிரியில் உள்ள வெலிங்டனில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். பின்னர் கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர், 10-ந்தேதி நடைபெறும் இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில் நடக்கும் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்கிறார். பின்னர், அன்றிரவே அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications