கர்ப்பிணி பலி... கொலை வழக்கு பதிய நீதிமன்றத்தில் முறையீடு!
திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தாக்கி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் மீது கொலை வழக்கு பதிய நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

மதுரை: திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தாக்கி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் மீது கொலை வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அருகே நேற்று மாலை ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை விரட்டிச் சென்று ஆய்வாளர் காமராஜ் வாகனத்தை எட்டி உதைத்ததில் கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டித்து இரவு பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவங்கள் அரங்கேறின.

இந்நிலையில் காவல்துறையின் அத்துமீறலால் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சமூக ஆர்வலர் பாத்திமா முறையீடு செய்துள்ளார். காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதியவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதே போன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு சம்பவத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று முறையிட்டனர். தாமாக முன்வந்து விசாரிப்பதற்கான ஆவணங்கள் இருந்தால் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு ஏற்கத் தயார் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications