கூட்டணிக்கு அழைத்த கருணாநிதிக்கு நன்றி.. பிரேமலதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூட்டணிக்கு தேமுதிகவை அழைத்த தலைவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்தார்.
தேமுதிக மகளிர் மாநாட்டில் பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதன் பிறகு பிரேமலதா பேசுகையில் தேமுதிகவ கூட்டணிக்கு வருமாறு அழைத்த தமிழகத்தின் மூத்த தலைவர் கருணாநிதி, அண்ணன் வைகோ, அண்ணன் ஈவிகேஎஸ் இளங்கோவன், அண்ணன் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், மத்திய அமைச்சர் ஜவடேகர், தமிழிசை செளந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

திமுக அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக ஆட்சியமைக்கும். நமது முரசு நாளைய தமிழக அரசு என்று அனைவரும் உறுதி எடுத்து கொண்டு தேமுதிகவின் வெற்றிக்காக உழைப்போம் என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications