கலர் ஜெராக்ஸ் மூலம் ரூ.100 தயாரிப்பு.. திருப்பத்தூர் அருகே வீட்டிலேயே கள்ளநோட்டு அடித்தவர் கைது
திருப்பத்தூர் அருகே வீட்டிலேயே கள்ளநோட்டு அடித்தவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்: திருப்பத்தூர் அருகே வீட்டிலேயே ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் பகுதிகளில் கள்ளநோட்டுக்கள் தயாரித்து புழக்கத்தில் விடப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து புகார்களின் பேரில், அப்பகுதிகளில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருப்பத்தூர் அருகே உள்ள புதுபூங்குளம் பகுதியிலும் சோதனை மேற்கொண்டனர். அங்கு ரமேஷ் என்பவரின் வீட்டினுள் அதிரடியாக நுழைந்த அவர்கள், கள்ள நோட்டுக்கள் தயாரிப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, கலர் ஜெராக்ஸ மூலம் தயாரிக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றினர். அத்துடன், நோட்டுக்களை அச்சடிக்க பயன்படும் பிரிண்டிங் மிஷினையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கள்ள நோட்டுகளை அச்சடித்த குற்றத்திற்காக ரமேஷை கைது செய்த போலீசார், இந்த விவகாரத்தில் எத்தனை பேருக்கு தொடர்பு, வேறு யாரேனும் ரமேஷின் பின்னணியில் இருக்கிறார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications